இந்தியா- இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட்: தயார் நிலையில் உலகின் மிகப்பெரிய மைதானம்

team champion sport
By Jon Feb 26, 2021 06:04 AM GMT
Report

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் இன்று பிற்பகலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றன.

எனவே 3வது போட்டியை வெற்றி பெறும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்குகின்றன, இங்கிலாந்து அணியும் முக்கியமான மாற்றங்களை செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் பேர்ஸ்ட்டோவ், ஸேக் கிராவ்லி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணியில் ஷாபாஷ் நதீமிற்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர் யார் என்பதை தீர்மானிக்கவுள்ள போட்டிகள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் உள்ளது.