இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை பார்த்து ரசித்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி பல திட்டங்களை தொடங்கி வைக்க ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பலரும் கலந்தூ கொண்டார். இந்த நிகழ்வை முடித்துவிட்டு இன்று மதியம் பிரதமர் மோடி கேரள மாநிலம் கொச்சி நோக்கி புறப்பட்டு சென்றார்.
அதே சமயம் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி விமானத்தில் செல்கையில் சேப்பாக்கம் மைதானத்தை புகைப்படம் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியின் வான்வழி காட்சியை பார்க்க முடிந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.
Caught a fleeting view of an interesting test match in Chennai. ? ?? ??????? pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021