இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கார் விபத்தில் சிக்கினார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான முகமது அசாருதீன் ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 3 உறவினர்கள் 3 பேருடன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரந்தம்போர் என்ற இடத்துக்கு அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கார் சாலையோரம் இருந்த உணவு கடை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அசாருதீன் மற்றும் அவருடன் இருந்த 3 பேரும் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
அதேசமயம் உணவு கடையின் ஊழியர் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அசாருதீன் உள்பட 4 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் 4 பேரும் மருத்துவமனையிலிருந்து திரும்பினார்கள்.
