விதிமுறைகளை மீறினார்களா இந்திய வீரர்கள்? - புதிய சிக்கலில் இந்திய அணி

india-cricket-rahane-australiya
By Jon Jan 03, 2021 09:05 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இந்தியஆஸ்திரேலிய அணி வீரர்கள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் மெல்போர்னில் இருந்த இந்திய வீரர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்திய வீரர்களான ரோஹித் ஷர்மா, சுப்னம் கில், ப்ரித்தீவ் ஷா, சைனி, ரிஷப் பண்ட் ஆகியோர் வெளியே ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளனர்.

அப்போது ரசிகர்கள் அவர்களைச் சந்தித்த படங்கள் வெளியாகி உள்ளன மேலும், வீரர்கள் சாப்பிட்ட உணவுக்கு ரசிகர்கள் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றச்சாடு எழுந்துள்ளது.

இதனால், ரோஹித் ஷர்மா உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்திய அணிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தபடும் காலம் 14 நாட்கள் என்றாலும், இந்த 5 இந்திய வீரர்களும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுவது சாத்தியம் இல்லாமல்தான் உள்ளது.

ஏனென்றால் , 7 மற்றும் 15 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் தொடங்குகின்றது.இன்று தனிமைபடுத்தபட்ட காலம் தொடங்கினாலும், 16-ம் தேதிதான் முடிவடையும்.

ஆகவே முதல் டெஸ்ட்டில்போட்டியில் இந்த 5 வீரர்களும் விளையாட முடியாது.இதனால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்.

அதிலும் ரோஹித், கில், ரிஷப் ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாதது பெரும் இழப்பாக அமைந்துவிடும். ஒருவேளை 3 நாட்களில் தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்தால் மட்டுமே அனைவரும் அடுத்த போட்டியில் ஆட முடியும்.