இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா தொற்று
பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய கொரோனா, இந்தியாவில் மேலும் 4 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 29 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து பிரிட்டனில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கான பரிசோதனைகள் புவனேஸ்வர், பெங்களூரு, ஐதராபாத்தில் உள்ளிட்ட 10 ஆய்வகங்களில் நடைபெறுகிறது. புதிய உருமாறிய கொரோனா தொற்றுக்கு நேற்று (டிச.,31) வரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் தனித்தனி அறையில் வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் பல பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டு வருவதால் பாதிப்பு எண்ணிக்கை இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.