இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அவசர அனுமதி

india-brition-corona-new-virush
By Jon Jan 03, 2021 08:43 AM GMT
Report

கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் இறுதி கட்டத்திலே உள்ள நிலையில் மத்திய அரசு இரண்டு தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு வழங்கும் பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பு மருத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும், ஃபைசர் நிறுவனம் சார்பில் மேலும் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்கள் சார்பில் தடுப்பூசி தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர வேண்டும் என மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்து இருந்தது.

மேலும் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இது குறித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றார்.