195 ரன்களில் வீழ்ந்த ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைபற்றிஅசத்திய பும்ரா
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியா 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி,மெல்போர்னில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ஜோ பர்ன்ஸ் ரன்கள் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். மேத்யூ 30 ரன்னில் அஷ்வினிடம் ஆட்டமிழந்தார்.இதில் ஆஸ்திரேலியா அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின்னர் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியாவிற்கு விக்கெட்டுகள் விழ ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
