வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்- சென்னை வந்த இந்திய அணி!

Cricket Indian Cricket Team Sports
By Vidhya Senthil Sep 13, 2024 06:08 AM GMT
Report

ரிஷப் பண்ட் விபத்திலிருந்து மீண்டு வந்த பிறகு, விளையாடும் சர்வதேச டெஸ்ட் போட்டி இதுதான்.

 டெஸ்ட் போட்டி

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சென்னை வந்தார். இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

rohit sharma

இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது. இதற்கிடையே, வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்க இந்திய அணி சென்னைக்கு இரவு வந்தடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகும் ரோகித் சர்மா? ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகும் ரோகித் சர்மா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்று முதல், அவர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். வங்கதேச அணியுடனான இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல்,

சென்னை 

ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக இந்திய அணி இறுதியாகக் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் விளையாடியது .

indian team

இதனையடுத்து ரிஷப் பண்ட் விபத்திலிருந்து மீண்டு வந்த பிறகு, விளையாடும் சர்வதேச டெஸ்ட் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.