ஆஸ்திரேலியாவை கதறவிட இவர் தான் கரெக்ட் - ஸ்கெட்ச் போடும் பிரட் லீ
முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிரட் லீ தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ind vs aus
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய அணி சரியான ஃபார்மில் இருப்பதால், இந்திய அளி கடுமையாக போராட வேண்டியிருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் பிரெட் லீ, ''உம்ரான் மாலிக் எனக்கு மிகவும் பிடித்தமான வீரர். அவருக்கு டெஸ்ட் போட்டியிலும் இடம் கொடுக்கலாம்.
பிரெட் லீ ஐடியா
கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் விளையாடியிருக்க வேண்டும். இதனை நான் பலமுறை வலியுறுத்தியிருந்தேன். நான் ஒரு அணியை தேர்வுசெய்தால், உம்ரான் மாலிக்கின் பெயரைத்தான் முதலில் சேர்ப்பேன். அந்த அளவிற்கு உம்ரான் மாலிக்கிடம் திறமை இருக்கிறது.
அவரது பந்துவீச்சில் தனித்துவம் இருக்கிறது. அவரை அவரது போக்கில் செயல்படவிட்டாலே, பல பேட்டர்களுக்கு பயம் ஏற்பட்டுவிடும். அந்த அளவுக்கு அவரது பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் உம்ரான் மாலிக்கிற்கு இடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், நிச்சயம் பேட்டர்களை அவர் பயமுறுத்துவார்.” எனத் தெரிவித்துள்ளார்.