பொங்கல் பரிசு விநியோகம்; அடித்த ஜாக்பாட் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Tamil nadu DMK Festival
By Sumathi Jan 24, 2024 06:11 AM GMT
Report

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரிசுத் தொகுப்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேட்டி மற்றும் புடவை போன்றவை வழங்கப்பட்டது.

ration shop

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற்றனர். இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததற்காக ஏற்பட்ட கூடுதல் பணிக்காக 2,500 ரூபாய் வழங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு - கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு - கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

ஊக்கத்தொகை

அதன்படி, தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு அட்டைக்கு 50 காசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu

ரேஷன் கடை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் இந்த ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.