நிலவை தொட்டு இந்தியா சாதனை, அதே நேரத்தில் பிறந்த 4 குழந்தைகள் - சந்திரயான் பெயர் வைத்து மகிழ்ந்த பெற்றோர்!
சந்திரயான் நிலவை தொட்ட தருணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
சந்திரயான் 3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைத்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இந்த சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது.
விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இந்த நிகழ்வை நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறது.
குழந்தைகளுக்கு பெயர்
இந்நிலையில், லேண்டர் விக்ரம் நிலவில் கால் பதித்த நேரத்தில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் 3 ஆண் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 4 குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு சந்திரயான் என அவர்களது பெற்றோர் பெயரிட்டு மகிழ்ந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்த சாதனை நாளில் குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.