AI தாக்கத்தால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவம்- இன்னும் சில வருடங்கள்தான்..யுவன்!

Yuvan Shankar Raja Coimbatore
By Swetha Sep 25, 2024 02:30 PM GMT
Report

ஏஐ தொழில்நுட்பத்தால் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது என யுவன் தெரிவித்துள்ளார்.

யுவன்

கோவையில் வருகிற 12-ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

AI தாக்கத்தால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவம்- இன்னும் சில வருடங்கள்தான்..யுவன்! | In 15 Yrs Ai Will Replace Music Directors Yuvan

அப்போது பேசிய அவர், “ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களுடன் கான்சர்ட் திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ‘தி கோட்’ படத்தின் பாடலில் ரசிகர்களின் விமர்சனத்தை ஏற்று திருத்தம் செய்தோம்.

விஜய் கட்சி மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன தகவல்

விஜய் கட்சி மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன தகவல்

AI 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பாடலை இசையமைத்து தரும்படி கேட்டால் செய்து கொடுப்பேன்” என்றார். பிறகு ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் பாடல்கள் குறித்து யுவன் கூறுகையில்,

AI தாக்கத்தால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவம்- இன்னும் சில வருடங்கள்தான்..யுவன்! | In 15 Yrs Ai Will Replace Music Directors Yuvan

“இன்னும் 5,10 வருடங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது. சீரியஸாகவே சொல்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சொல்வது போல மனிதர்களால்

கொடுக்கும் ஒரிஜினல் வெர்ஷனை ஏஐ-யால் தரமுடியாது. ஆனால், அதேசமயம் இசைத் துறையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறையலாம்” என்று தெரிவித்துள்ளார்.