முதல்வர விட அதிகமா படிச்சிருக்கேன்...முட்டாள் தனமான ஆட்சி!! ஆவேசமான அண்ணாமலை!!
தமிழக பாஜக தற்போது கொடி கம்ப விவகாரத்தில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
பாஜக கொடி கம்ப விவகாரம்
சென்னை பனையூரில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பம் நீக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக வட்டாரத்தில் அது குறித்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி கைதானது, 10000 கொடி கம்பங்கள் நடுவோம் என அண்ணாமலை அறிவித்தது என தொடர்ந்து கொடி கம்ப விவகாரத்தில் பாஜகவினர் மும்முரம் காட்டி வருகின்றார்.
தொடர்ந்து நேற்று கொடி கம்ப நாடும் பணியில் ஈடுபட்ட பாஜகவின் கட்சி நிர்வாகிகள் பலர் கைதான நிலையில், அண்ணாமலை தனது கண்டனத்தை ட்விட்டர் தளத்தில் பதிவு செய்த்திருந்தார். முறையான அனுமதி வாங்காமல், இப்பணியில் ஈடுபட்டதாக கூறி அனுமதி மறுத்த தமிழக காவல்துறையினர் பாஜக நிர்வாகிகளை கைது செய்தனர்.
2-3 நாள் தான்...அப்புறம்
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சொந்த இடத்திலும், வீட்டிலும், ஏற்கனவே கொடி கம்பங்களின் கொடி இருக்கும் இடத்தில் கொடி வைப்பதை காவல்துறையினர் தடுக்கின்றனர் என குறிப்பிட்டு, இதற்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை என்றார்.
இவ்வாறு காவல் துறை ஏவல் துறையாக மாறினால், அவர்களை 24 மணி நேரமும் ரோட்டிலேயே வைத்திருக்க நான் தயார் என கூறிய அண்ணாமலை, ஆனால் இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றார். இதனை முதல்வர் புரிந்து கொள்ளவேண்டும் என கூறிய அவர், முதல்வரை விட தான் அதிகமாகவே படித்து தான் இங்கு வந்துளோம் என்றும் முட்டாள் தனம் இருப்பதால் தான் ஆட்சியில் இப்படி இருக்கிறார்கள் என்று விமர்சித்து, காவல்துறைக்கும் பாஜகவிற்கு போட்டி என உருமாற்றம் வேலையில் திமுகவில் இருக்கும் என்றார்.
ஆனால் காவல்துறை உயரதிகாரிகள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் போட்டி பாஜகவிற்கும் திமுகவிற்கு என்று தான் என கூறி, தாங்களும் 2 - 3 நாட்கள் பொறுத்து பார்ப்போம் இல்லையென்றால் காவல்துறைக்கு தான் இது சிக்கலாக மாறும் என கூறினார்.