Wednesday, Jun 18, 2025

காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகள் - பெற்ற தாய் செய்த கொடூர சம்பவம்!

Karnataka Crime Murder
By Vidhya Senthil 8 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

தனது காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதி, பெற்ற குழந்தைகளைத் தாயே கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா

கர்நாடகா மாநிலம், ரமணகரா பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் அவரது மனைவி ஸ்வீட்டி , இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிவாவின் மனைவி ஸ்வீட்டிக்கு கிரிகோரி பிரான்சிஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

karnataka

இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்துக்கு மீறிய உறவாக இருந்து வந்துள்ளது.இதனால் சிவாவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தனது கணவருக்குத் தெரியாமல் தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மஞ்சுநாத் நகரில் ஸ்வீட்டி குடியேறியுள்ளார்.

இயற்கைக்கு மாறான பாலியல் உறவு; மனைவி பகீர் புகார் - விசாரணையில் ட்விஸ்ட்!

இயற்கைக்கு மாறான பாலியல் உறவு; மனைவி பகீர் புகார் - விசாரணையில் ட்விஸ்ட்!

குடும்பத்தைக் காணாமல் தவித்த சிவா, இது குறித்துப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டனர்.

கொடூர சம்பவம்

அப்போது ஸ்வீட்டி வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் கழிவறையில் அருகில் உள்ள இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததைக் கண்டு தோண்டி பார்த்தனர்.அப்போது அந்த இடத்தில் குழந்தைகள் சடலம் கண்டெடுக்கப்பட்டத்தைத் தொடர்ந்து விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர்.

 murder

அதில் மேலும் திடுக்கிடும் தகவல் வெளியானது தங்களின் உறவுக்குக் குழந்தைகள் இடைஞ்சலாக இருக்கும் என்று கருதியே ஸ்வீட்டியும், கிரிகோரி பிரான்சிஸும் ஒரு குழந்தை அக்டோபர் 1 ஆம் தேதியும், மற்றொரு குழந்தை அக்டோபர் 7 ஆம் தேதியும் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்த வருகின்றனர்.