தேர்தலில் வென்றால்..எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி - டொனால்டு டிரம்ப் அதிரடி!
தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அதிரடி
அமேரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடப்பாண்டின் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில், கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையிலும் தாக்கிப் பேசி வரும் டொனல்டு டிரம்ப், கமலா ஹாரிஸை கம்யூனிச தலைவராக சித்தரிக்க முயன்று வருகிறார். இதனிடையே உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ்,
டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் கடந்த ஆகஸ்ட் மாதம் நேர்காணல் செய்தார். அந்த நிகழ்வு எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. இந்த நிலையில், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால்,
எலான் மஸ்க்
எலான் மஸ்க் அமைச்சரவையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று கூறினார். இதற்கு முன்னதாகவும் டிரம்ப் அதிபரானால்,
வெள்ளை மாளிகை ஆலோசகராக எலான் மஸ்க் இருக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் எலான் மஸ்க் அதை முற்றிலும் மறுத்திருந்தார். தற்போது டிரம்ப் பொது வெளியில் இதுகுறித்து வெளிப்படையாகவே அதனை தெரிவித்திருகிறார்.
2008 மற்றும் 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.