இனி இந்த தப்ப செஞ்சா பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் - ஐசிசி அறிவிப்பு

International Cricket Council
By Sumathi Jun 27, 2025 07:15 AM GMT
Report

புதிய மாற்றங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு அணி 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசத் தொடங்க வேண்டும். அதை கண்காணிக்க நடுவர்கள் ஸ்டாப் க்ளாக் எனப்படும் நிறுத்து கடிகாரத்தை வைத்து கண்காணிப்பார்கள்.

Test Cricket

60 வினாடிகளை தாண்டினால் நடுவர்கள் இரண்டு முறை எச்சரிக்கை விடுப்பார்கள் என்றும் அதையும் தாண்டி தாமதம் செய்தால் பந்து வீசும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்பட்டு எதிரணிக்கு வழங்கப்படும். இந்த விதிமுறை ஒவ்வொரு 80 ஓவர்களுக்கு ஒரு முறை புதிதாக கணக்கிடப்படும்.

ரோஹித், கோலி 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கஷ்டம் - கங்குலி ஷாக் தகவல்

ரோஹித், கோலி 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கஷ்டம் - கங்குலி ஷாக் தகவல்

ICC-ன் புதிய ரூல்ஸ்

பந்தின் மீது உமிழ்நீர் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டால் அதை மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உமிழ்நீர் பயன்படுத்தியதற்காக பந்து வீசும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்படும், உமிழ்நீர் பயன்படுத்தப்பட்டாலும் பந்தின் தன்மை மாறாத வரை நடுவர்கள் பந்தை மாற்றத் தேவையில்லை.

ICC

இனி நோ-பால் என்றாலும் கேட்ச் சோதிக்கப்படும். அது தெளிவாக இருக்கும் பட்சத்தில் நோ-பால் போட்டதற்கான எக்ஸ்ட்ரா ரன் வழங்கப்படும். மேலும் அந்த கேட்ச் தெளிவாக இல்லை என்றால், பேட்ஸ்மேன்கள் ஓடிய ரன்களும் சேர்த்து வழங்கப்படும்.

பந்து லெக் பேடில் பட்டது என்றால், பேட்ஸ்மேன் கேட்ட ரிவ்யூவில் எல்.பி.டபள்யூவும் சோதிக்கப்படும். அது அவுட் ஆக இருக்கும் பட்சத்தில், அம்பையர் அவுட் தான் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.