எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும் : நிஜமான காத்து வாக்குல ரெண்டு காதல்

India Viral Photos
By Irumporai Jun 21, 2022 05:55 AM GMT
Report

தமிழில் சமீபத்தில் வெளியாக திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இதில், காதா நாய்கனாக வரும் விஜய் சேதுபதி இரண்டு பெண்களை  காதலிப்பார் அதே சமயம் ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பார்.இறுதியில், இரண்டு பெண்களை ஒரே சமயத்தில் காதலிப்பது தவறு என உணர்ந்த ஹீரோ, இருவரையும் விட்டு பிரிந்து சென்று விடுவார்,

நிஜமானகாத்துவாக்குல ரெண்டு காதல்

படத்தில் தான் இரண்டு காதல் எல்லாம் நிஜத்தில் வாய்பில்லை ராஜா எனக் கூறுபவர்களுக்கு அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. ஆனால்,  இதில் இரண்டு பெண்களும் காதலித்த நபரை திருமணம் செய்துள்ளார், என்பதுதான் உண்மை.

ஆகவே 90 கிட்ஸ் மனதை திடபடுத்திக்கொள்ளுங்கள் வாருங்கள் நடந்தது என்ன என்பதை அறிந்து தெரிந்துகொள்வோம்:

ஜார்க்கண்ட் மாநிலம் பண்டா கிராமத்தை சேர்ந்தவர் சந்திப். அன்றாடம் கூலி வேலை செய்யக்கூடிய சந்திப் அதே பகுதியை சேர்ந்த குசும் லக்ரா என்பவரை சந்தீப் காதலித்துள்ளார் . இருவரும் காதலித்ததால், லிவ்விங்கில் வாழ்ந்த இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும் :  நிஜமான காத்து வாக்குல ரெண்டு காதல் | I Love Them Both Jharkhand Groom Marries 2 Women

ஆனால், கடந்த ஆண்டு மேற்குவங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற போது சந்தீப் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு வேலைக்கு வந்த சுவாதி குமாரியை சந்தீப் காதலிலிக்க தொடங்கினார். அவரும் இவரை காதலித்துள்ளார்.

நாளடைவில் இவர்களது காதலை சந்தீப் மற்றும் குசும் குடும்பத்தினருக்கு தெரிய வர முதலில் 2 பெண்களும் முதலில் எதிர்த்தாலும் பின்னர் சந்தீப்ஒரு வழியாக சமாதானம் செய்துள்ளார்.

எனக்கு ரெண்டு பேரும் வேணும்

இதனால் அவர்களது குடும்பத்தினர் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருவழியாக, 2 பெண்களையும் சந்தீப் திருமணம் செய்து கொள்ள முடிவானது. ஆனால் இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராமம் எதிர்த்தாலும் தனது காதலிகளான குசும் லக்ரா, சுவாதியை கரம் பிடித்தார்.

எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும் :  நிஜமான காத்து வாக்குல ரெண்டு காதல் | I Love Them Both Jharkhand Groom Marries 2 Women

ஒரே சமயத்தில் இருவருக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சந்திப் கூறும் போது 2 பெண்களை திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் நான் இருவரையும் காலிக்கிறேன். இவர்களில் ஒரு வரை கூட விட்டு பிரிய முடியாது எனக் கூறியுள்ளார்.

ஓ பேபி தங்கமே ரெண்டும் என்றும் வேணுமே, ஒன்றாக அன்பாக இருக்கலாமே, ஒன்னையும் ஒன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே, எபோதும் எபோதும் நான் பார்த்துபேனே, என்ற பாடல் வரிகள் போல தனது காதலிகளை கரம் பிடித்துவிட்டர் சந்தீப்

அதே சமயம் 90 ஸ் கிட்ஸ்கள் மனதில் இங்கு ஒரு கல்யாணம் எனபதே மதில் மேல் பூனை போலத்தான் நடக்குமா என்பதே தெரியாது இதில் இரண்டு திருமணமா ? என பொங்கி வருகின்றனர்.   

கொரோனா பாதித்த அஸ்வினால் இங்கிலாந்து செல்ல முடியுமா? : சோகத்தில் ரசிகர்கள்