முதலிரவில் கணவன் மாத்திரை சாப்பிட்டு விபரீத முயற்சி - 7 நாட்களில் புதுமணப்பெண் உயிரிழப்பு!
திருமணம் முடிந்த 7 நாட்களில் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கணவன் வெறிச்செயல்
உத்தரபிரதேசம், ஹமிர்பூரில் பொறியாளர் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது முதலிரவில் பாலியல் செயல்திறன் அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு மனைவியுடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்த பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மனைவியை மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி 7 நாட்களில் உயிரிழந்தார். தொடர்ந்து, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் புகாரளித்தனர்.
மனைவி பலி
இதற்கிடையில், கணவன் குடும்பத்துடன் ஊரைவிட்டு தப்பியுள்ளார். தற்போது இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கணவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில்,
அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அளவுக்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவரது அந்தரங்கப் பகுதியில் ஏற்பட்ட காயங்களால் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.