குழந்தை இல்லாததால் டார்ச்சர், என் சாவுக்கு இவங்க தான் காரணம் - கடிதம் எழுதிவிட்டு பெண் தற்கொலை!
மனைவியை டார்ச்சர் செய்ததால் கடிதம் எழுதிவிட்டு பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டார்ச்சர்
புதுச்சேரி, திருக்கனூரை அடுத்த கே.மணவேலி ரோஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது அத்தை மகளான மோனிகாவை (23) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை, இதனால் இவரது கணவரும் அவரது குடும்பம் அடிக்கடி செய்துள்ளனர். இது பற்றி மோனிகா அவரது தாயிடம் கூறியுள்ளார். மேலும், இவரது கணவர் தலையில் அடித்ததால் தலை வீங்கியுள்ளது, முகத்திலும் அடித்ததால் முகம் வீங்கிப்போய் உள்ளது என்று கூறியுள்ளார். அவரது தாயார் கவலைப்படாதே, நாளை காலை வந்து பார்க்கிறோம் என்று சமாதானம் செய்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில், அடுத்தநாள் காலையில் அவரது தாய் அவருக்கு போன் செய்துள்ளார், ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் அருகில் இருக்கும் அவரது அக்காவை பார்க்கசொல்லியுள்ளார். அவர் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபொழுது அவர் திருமண புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேலும், அவர் ஒரு வீடியோ பதிவில், "குழந்தை இல்லை என்பதற்காக கணவன் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறான். தலையில் அடித்ததால் என்னால் தலைவலியை தாங்க முடியவில்லை. குழந்தை இல்லாததற்கு நான் என்ன செய்ய முடியும். என் மீதுதான் தவறா" என அழுது கொண்டே பேசியுள்ளார்.
பின்னர் போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர், அதில் "எனது இறப்புக்கு கணவர், அவரது அம்மா, அப்பா, தம்பி ஆகியோர்தான் காரணம். குழந்தை இல்லாததை சொல்லி சொல்லி என்னை டார்ச்சர் செய்தனர். யாரையும் சும்மா விடக் கூடாது. கணவரை போலீஸில் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து, போலீசார் அவரது கணவர் அரவிந்தை கைது செய்தனர்.