கணவருக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு; மனமுடைந்த மனைவி செய்த காரியம் - பகீர் சம்பவம்!

Chennai Fire Death
By Swetha Mar 20, 2024 04:59 AM GMT
Report

கணவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

திருவொற்றியூர் ராமசாமி நகரை சேர்ந்த சிவராஜ் (38) என்பவருக்கு கவுதமியுடன் (36) திருமணமாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவருக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு; மனமுடைந்த மனைவி செய்த காரியம் - பகீர் சம்பவம்! | Husband Having Affair Woman Burns Herself

இந்நிலையில்,கடந்த சில நாட்களாக சிவராஜுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த மனைவி கவுதமி அது குறித்து சிவராஜுவிடம் கேட்டுள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த கவுதமி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டு தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.

கழிவறைக்கு சென்ற 5 வயது சிறுவன்; அத்துமீறிய 50 வயது பெண் - அதிர்ச்சி சம்பவம்!

கழிவறைக்கு சென்ற 5 வயது சிறுவன்; அத்துமீறிய 50 வயது பெண் - அதிர்ச்சி சம்பவம்!

பகீர் சம்பவம்

மனைவி உடல் தீயில் எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவராஜ் உடனே அவரை காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் அதற்குள் உடம்பு முழுவதும் தீப்பரவி பலத்த தீக்காயம் அடைந்தார்.

கணவருக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு; மனமுடைந்த மனைவி செய்த காரியம் - பகீர் சம்பவம்! | Husband Having Affair Woman Burns Herself

இதனையடுத்து, உறவினர்களின் உதவியுடன் படுகாயமடைந்த கவுதமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தார்.

மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த கவுதமி, போலீசாரிடம் தனது சாவுக்கு கணவர் தான் காரணம் என்று வாக்குமூலம் அளித்ததை அடுத்து அவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.