சாக்லேட்டுக்குள் கிடந்த மனித விரல் - ஷாக்கான ஊழியர்!

World Srilankan Tamil News
By Vinothini Aug 07, 2023 06:11 AM GMT
Report

 சிற்றுண்டி சாலையில் வாங்கிய சாக்லேட்டுக்குள் மனித விரல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித விரல்

இலங்கை, கொழும்புவில் மஹியங்கனை வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டி சாலையில் ஊழியர் ஒருவர் சாக்லேட்டு வாங்கியுள்ளார். அதனை அவர் உண்ணும் பொழுது கடிப்பதற்கு மிக கடினமாக இருந்துள்ளது. இதனால் அதனை எடுத்து கழிவிவிட்டு பார்த்துள்ளார்.

human-finger-found-in-chocolate

அப்பொழுது அது ஒரு மனிதனின் விரல் போல் தெரிந்துள்ளது. பின்னர் அதனை உற்று நோக்கியதில் அது நகத்துடன் கூடிய பெருவிரல் என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர், வைத்தியசாலை உயர் அதிகாரிகளிடம் இது பற்றி புகாரளித்துள்ளார்.

human-finger-found-in-chocolate

மேலும், இது தொடர்பாக மஹியங்கனை பொது சுகாதார துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.