தீட்சிதர் விவகாரம்; ஆதாரம் கொடுத்தால் மன்னிப்பு கேட்கிறேன் - எச் ராஜா அதிரடி
தீட்சிதர் விவகாரத்தில் ஆதாரம் காட்டினால் மன்னிப்பு கேட்பதாக எச்.ராஜா அறிவித்துள்ளார்.
சிதம்பரம் தீட்சிதர்கள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை விசிக நிர்வாகி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதனால் தனது செல்போனை பறித்து தன்னை தீட்சிதர்கள் தாக்கியதாக விசிக நிர்வாகி புகார் அளித்தார்.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாசிடம் கேள்வியெழுப்பிய போது, கோவிலில் அனுமதிக்க முடியாது என்றும், அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கதக்கது. தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
எச்.ராஜா
இந்நிலையில் ராமதாசின் கருத்து குறித்து பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பிய போது, அந்த இடத்தில விளையாடுவது தவறில்லை. அங்கு நிறைய விளையாட்டுகள் நடைபெறும். அவர்களின் அனுமதி இன்றி வீடியோ எடுத்தது தவறு.
தீட்சிதர்கள் தாக்கினார்கள் என கூறுவது முற்றிலும் பொய். தீட்சிதர்கள் தாக்கியதற்கான வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.மன்னிப்பு கேட்கிறேன். அவர்கள் சிறிய சமுதாயம் என்பதால் அச்சுறுத்த பார்க்கிறார்கள் என பேசியுள்ளார்.