ரெடியா இருங்க; மகளிருக்கு ரூ.1000 எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தேவை - முக்கிய தகவல்!

Tamil nadu
By Sumathi Jul 19, 2023 02:59 AM GMT
Report

விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் நாட்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. அதன்படி முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும்.

ரெடியா இருங்க; மகளிருக்கு ரூ.1000 எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தேவை - முக்கிய தகவல்! | How To Apply Magalir Urimai Thogai Scheme

நியாயவிலைக் கடைப் பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.

முகாம்கள் 

பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

ரெடியா இருங்க; மகளிருக்கு ரூ.1000 எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தேவை - முக்கிய தகவல்! | How To Apply Magalir Urimai Thogai Scheme

விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.

ஆவணங்கள்

ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை உதவி தொலைபேசி எண். 044-25619208.