மகளிருக்கு ரூ.1000; டோக்கன் தேதி அறிவிப்பு - இதை மட்டும் பண்ணீராதிங்க!
ரூ.1000 உரிமைத் தொகைக்கான டோக்கன் வழங்கப்படுவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
உரிமைத் தொகை
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்காக வரும் 20-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்த சுற்றறிக்கையில்,
தமிழகம் முழுவதும் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் அலுவலராக இருப்பர்.
டோக்கன்
ஒரு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு குடும்பத்தினர் பயன்படுத்தக் கூடாது. ரேஷன் பொருட்களை வாங்காத அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்களை வழங்க தேவையில்லை.
தேவைப்பட்டால் அவர்கள் நேரடியாக வந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். ரேஷன் கடை ஊழியர்களை தவிர வேறு யாரையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.