சீமான் ஒரு தமிழர் என்று எப்படி சொல்ல முடியும்.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

Naam tamilar kachchi Tamil nadu DMK Chennai Seeman
By Swetha Oct 21, 2024 12:09 PM GMT
Report

சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, “சீமான் தமிழ் நாட்டின் மக்களின் மத்தியில் ஏதோ குழப்பம் செய்ய வேண்டும் என்பதாக பேசி வருகிறார். தமிழ் தாய் வாழ்த்து என்பது திமுக ஒன்றிய செயலாளர் மாவட்ட செயலாளர் கலைஞர் எழுதியது அல்ல;

சீமான் ஒரு தமிழர் என்று எப்படி சொல்ல முடியும்.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்! | How Can Seeman Be A Tamilan Says Rs Bharathi

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய கவிதை 50 ஆண்டு காலமாக இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடபட்டு வரப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையார் பாடிய தமிழ் தாய் வாழ்த்து சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்.

அண்ணன் தம்பி பாசம்;விஜய்யின் படமும், மாநாடும் சிறக்க வாழ்த்துகிறோம் - சீமான்!

அண்ணன் தம்பி பாசம்;விஜய்யின் படமும், மாநாடும் சிறக்க வாழ்த்துகிறோம் - சீமான்!

சீமான் 

திருமாவளவன் திமுக முதல்வர்தான் இருக்க வேண்டும் எனக் கூறிய பிறகு அது குறித்தான கேள்வி எழவில்லை; தளபதி தான் முதல்வராக வர வேண்டும் என பலமுறை சொல்லி இருக்கிறார் திருமாவளவன். சீமான் வலை போட்டு இழுக்கலாம் என பார்க்கிறார்.

சீமான் ஒரு தமிழர் என்று எப்படி சொல்ல முடியும்.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்! | How Can Seeman Be A Tamilan Says Rs Bharathi

அந்த அபாய வழியில் திருமாவளவன் சிக்க மாட்டார். எங்களுக்கு தற்போது உள்ளவர் ஆளுநர் கிடையாது. ஆளுநரின் பதவி காலம் முடிந்துவிட்டது , அவருடைய மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.

எப்பொழுது செல்கிறார் என தேதி மட்டும் தான் அறிவிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இன்னொரு ஆளுமை பதவி ஏற்கும் வரை அவர் ஆளுநராக இருக்க வேண்டும் என்று இருக்கிறது.