சசிகலா உடல்நிலைக் குறித்து மருத்துவமனை வெளியிட புதிய தகவல்
சசிகலா உடல்நிலைக் குறித்து மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. சசிகலா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், வெளியிட்ட அறிக்கையில் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசியூவில் இருந்தாலும் தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது துடிப்பு விகிதம் நிமிடத்திற்கு 68 மற்றும் இரத்த அழுத்தம் 128/56 மிமீ எச்ஜி, என்ற அளவில் உள்ளது.