மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியாகினர்

hospital-dead-child
By Jon Jan 10, 2021 03:03 PM GMT
Report

மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது.

பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.