காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனைக்கு சென்றோம் : விளக்கம் கொடுத்த விக்ரம் தரப்பு
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் மிகவும் அருமையாக நடித்து பிரமிக்க வைப்பவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது மனிரத்தனம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகால சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தவறாக பரவிய தகவல்
இந்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருந்த நிலையில், திடீரென விக்ரமுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விளக்கம் கொடுத்த விக்ரம் தரப்பு
ஆனால், இந்த செய்தியை சில தவறாக புரிந்துகொண்ட விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வதந்தி தகவலை பரப்பிவிட்டுள்ளனர்.
இதனையடுத்து, காய்ச்சல் காரணமாகவே நடிகர் விக்ரம் மருத்துவமனைக்கு சென்றதாக விக்ரம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம் சிகிச்சை முடிந்த பிறகு மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார்.