3வது மொழியாக இந்தி கட்டாயம் - மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
மகாராஷ்டிராவில் 3-வது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
புதிய கல்வி கொள்கை- மும்மொழிக் கொள்கை ஆகியவற்றின் பெயரால் தமிழ்நாட்டிலும் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தி கட்டாயம்
இங்கு புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.