மதுபோதையில் பெற்ற மகளுக்கே பாலியல் வன்கொடுமை... தந்தை கொடூரம்!

Tamil nadu Attempted Murder Sexual harassment Child Abuse
By Sumathi Jul 14, 2022 04:30 AM GMT
Report

மது போதையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஜான் கென்னடி.

குழந்தை வன்கொடுமை

இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு,

மதுபோதையில் பெற்ற மகளுக்கே பாலியல் வன்கொடுமை... தந்தை கொடூரம்! | High Court Upheld Father Who Raped His Daughter

குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கீழமை நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சைல்டு லைன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, மனுதாரரின் மனைவி மனுதாரர் மற்றும் 4 குழந்தைகளை பிரிந்து சென்றுள்ளார்.

மதுபோதையில் பெற்ற மகளுக்கே பாலியல் வன்கொடுமை... தந்தை கொடூரம்! | High Court Upheld Father Who Raped His Daughter

இந்நிலையில் 11 வயது மகள், சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் சைல்டு லைனுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது.

பொய் புகார் 

இந்த வழக்கில் இருந்து தப்புவதற்காக தனது மகளுக்கும் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே தவறான பழக்கம் இருப்பது தனக்கு தெரியவந்ததால், தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தாயும், தந்தையும் பிரிந்த நிலையில், நான்கு குழந்தைகளில் மூத்தவரான பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நடந்தது குறித்து தனது உடன்பிறந்தோருடன் பகிர்ந்து கொள்ள இயலாத கொடூர சூழலில் இருந்துள்ளார்.

ஆயுள் தண்டனை

குற்றமும் சாட்சிகளோடு நிரூபிக்கப்பட்ட பின்னரே கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. ஆகவே இந்த வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.