ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை.. அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு!

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Vinothini Nov 07, 2023 01:56 PM GMT
Report

ஓபிஎஸ் அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது எண்டன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இபிஎஸ் மனு

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், "அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.

high-court-orders-interim-ban-aiadmk-name-for-ops

ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தது.

பண மோசடி.. வீட்டிற்கு வெல்டிங்.. மிரட்டல் விடுத்த நடிகர் பிரபுதேவாவின் தம்பி - பரபரப்பு!

பண மோசடி.. வீட்டிற்கு வெல்டிங்.. மிரட்டல் விடுத்த நடிகர் பிரபுதேவாவின் தம்பி - பரபரப்பு!

நீதிமன்றம்

இந்நிலையில், இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போன நிலையில் தற்பொழுது தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.

high-court-orders-interim-ban-aiadmk-name-for-ops

எனவே, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.