சித்ரா தற்கொலை வழக்கு - சாட்சி கூறியதால் கொலை மிரட்டல்...ஹேம்நாத் நண்பர் மனு!

Attempted Murder Sexual harassment V. J. Chitra Crime
By Sumathi Jul 20, 2022 07:23 AM GMT
Report

நடிகை சித்ரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அவரது நண்பர் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

நடிகை சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ரா,கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ரா தற்கொலை வழக்கு - சாட்சி கூறியதால் கொலை மிரட்டல்...ஹேம்நாத் நண்பர் மனு! | Hemnath Friend Opposed Him In Chitra Suicide Case

மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஹேம்நாத்தின் நண்பர்

அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஹேம்நாத்தின் 10 ஆண்டு கால நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சையது ரோஹித் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சித்ரா தற்கொலை வழக்கு - சாட்சி கூறியதால் கொலை மிரட்டல்...ஹேம்நாத் நண்பர் மனு! | Hemnath Friend Opposed Him In Chitra Suicide Case

அதில், ஹேம்நாத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்ததாகவும், பல முறை எச்சரித்தும் கேட்காததால் அவரிடம் இருந்து விலகியிருந்ததாகவும் கூறியுள்ளார்.

கொலை மிரட்டல்

தன்னை பெரிய தொழிலதிபர் போல், அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நெருக்கமானவர் எனக் காட்டிக் கொண்டு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்றும் அதே போல தான் சித்ராவுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகருடன் நடனமாடியது குறித்து இருவருக்கும் இடையில் சண்டை நீடித்து வந்ததாகவும்,

அனைத்து தகவல்களும் தெரிந்த தன்னை இதுவரை போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும் மனுவில் கூறியுள்ளார். மேலும் தற்போது இவ்வழக்கு குறித்து சாட்சிகள் அளித்ததால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யவும் மனு அளித்துள்ளார்.