நீச்சல்குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாய்... உடனிருந்த நாய் செய்த நெகிழ்ச்சியான காரியம்

help-dog-swimmingpool
By Jon Jan 08, 2021 03:30 PM GMT
Report

வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ள ஒரு மிருகம் என்று பலரும் கூறுவார்கள். அதனால் தான் பலரின் வீட்டிலும் நாய் வளர்ப்பார்கள். மனிதர்கள் பலரிடம் காணக்கிடைக்காத நன்றியுள்ளம் கொண்ட குணத்தை நாயிடம் காணலாம்.

அந்தவகையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாயை, மற்றொரு நாய் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் தவறி விழுந்த பார்வையற்ற நாயை காப்பாற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அர்ஜென்டினா நாட்டினை சார்ந்த நபர் ஒருவர் இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

அதில் ஒரு நாய் பார்வை திறன் சக்தியை இழந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வீட்டின் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் பார்வையற்ற நாய் விழுந்துள்ளது.

அதனுடன் பாசமாக வளர்ந்து வந்த மற்றொரு நாய் அங்குமிங்கும் ஓடி குரைத்துள்ளது. நீண்ட நேரம் குரைத்தும் யாரும் வராததால் நீச்சல்குளத்தில் தவறி விழுந்த நாயை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கழுத்தில் கவ்வி மீட்டுள்ளது.

இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.