நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - அதீத கன மழை பெய்யலாம்..!

Tamil nadu Thoothukudi Tirunelveli
By Karthick Dec 17, 2023 10:35 AM GMT
Report

21 செ.மீ-க்கும் அதிகமாக அதீத கனமழை தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் பேரையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொட்டும் கன மழை

வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதால் தென் மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்து வருகின்றது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகின்றது.

heavy-rain-pours-in-tirunelveli-thoothukudi-today

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இன்று மதியம் 12 மணி வரையில் மட்டும் 12 செ.மீ மழை கொட்டியுள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் ஸ்டார்ட்..! அடுத்த 48 மணிநேரமும் மழை தான் - தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

சம்பவம் ஸ்டார்ட்..! அடுத்த 48 மணிநேரமும் மழை தான் - தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கனமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அணைகளின் மிக வேகமாக நிரம்பிவரும் நிலையில், உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகின்றது.

12 செ.மீ மழை

வெள்ள நீர் வீட்டிற்குள் புகுத்துள்ளதால் பல மக்களின் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு தரப்பில் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 4 மாவட்டங்களிலும் இடைவிடாத அதீத கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

heavy-rain-pours-in-tirunelveli-thoothukudi-today

இந்த நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 21 செ.மீ.க்கும் அதிகமான அதீதமான கனமழை பெய்யக் கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.