சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு!
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நிலநடுக்கம்
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ன்டேல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் வீடுகள், கடைகளில் என அனைத்தும் குலுங்க தொடங்கியது,
அங்கிருந்த பொருட்கள் அதிர்ந்து கீழே விழுந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறீ ஓடினர், இந்த நிலநடுக்கம் காரணமாக கலிபோர்னியாவில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
சுனாமி
அதுமட்டுமின்றி கடலோர பகுதிகளில் உள்ள உணவகங்களில் இருந்தும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சில மணி நேரத்திலேயே சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இதனால் அங்குள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், நிலநடுக்கம் குறித்து அதிபர் ஜோ பைடன் கேட்டறிந்ததாகவும், கலிபோர்னியா மாகாணத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.