மாரடைப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதை தவிர்க்க வேண்டும் - மத்திய அமைச்சர் வலியுறுத்தல்!
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள்இந்த 2 விஷயங்களை 2 ஆண்டுகளுக்கு தவிர்த்தால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு
உலகம் முழுவதும் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இப்போதைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
அந்த வகையில் சமீப காலமாக குஜராத் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய சிலர் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர். கடந்த2 0ம் தேதி நவராத்திரி விழாவில் 'கர்பா' நடனம் ஆடிக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் நடனமாடிய 10க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடின வேலைகளை தவிர்க்கவும்
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் கூறியதாவது "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு விரிவான ஆய்வை நடத்தியது.
கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், கடுமையாக உடற்பயிற்சி மற்றும் கடினமாக வேலை செய்வதை 2 ஆண்டுகளுக்கு தவிர்க்க வேண்டும் என அந்த ஆய்வு கூறுகிறது. இதன் மூலம் திடீர் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்” என்று கூறியுள்ளார்.