பேரழிவு: காட்டுத்தீயில் காணாமல் போன 1000 பேர் - 67 பேர் பலி!
காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
காட்டுத் தீ
அமெரிக்காவின் தீவு மாநிலம் ஹவாய் தீவுகள். மேற்கே 2,000 மைல் தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இத்தீவின் சில இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுத் தீ பற்றியது.
அருகில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான லைஹானா நகருக்குள் தீ மிக வேகமாகப் பரவியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 என அதிகரித்துள்ளது.
67 பேர் பலி
மேலும், பலர் தீக்காயம் அடைந்தனர். 11 ஆயிரம் பேர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தவிக்கும் நிலை உருவானது. தொடர்ந்து, பல நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணிகள் விமான நிலையங்களில் முகாமிட்டு, விமானத்துக்காக காத்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அதிவிரைவாக போதுமான நிதி ஆதாரங்கள் கிடைக்கும் வகையில் தீ பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் அவசர நிலையை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.
தீ மளமளவெனப் பரவியதற்கு ஹவாய் தீவு முழுவதும் காணப்படும் வறண்ட வானிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.