எங்க அம்மாவின் சொத்து மட்டும் இல்லையென்றால்... இளவரசர் ஹரிக்கு கிடைத்தது எவ்வளவு தெரியுமா?
பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர், பொருளாதார உதவிகள் அனைத்தும் தடைபட்ட நிலையில் தமது தாயார் டயானாவின் பணத்திலேயே வாழ்க்கையை சமாளிக்கும் நிலை ஏற்பட்டது என ஹரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கல் தம்பதி பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியது உட்பட, தங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட சிக்கல்களை தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே உடன் மொத்தமாக உடைத்துப் பேசியுள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, தாங்கள் அரச குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது தங்களின் வாழ்க்கை சூழலைப் பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படையாக வெளிய்யிட்டிருந்தனர். 2020 தொடக்கத்தில், தாங்கள் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பின்னர், அரச குடும்பத்தில் இருந்து பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
ஆனால், தாயார் டயானா தமக்கு அளித்த சொத்தில் இருந்தே அதன் பின்னர் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ஹரி தெரிவித்துள்ளார். தாயாரின் சொத்து இல்லை என்றால் தமது நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கும் எனவும் இளவரசர் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
1997 ஆகஸ்டு மாதம் சாலை விபத்தில் இளவரசி டயானா கொல்லப்படும் போது, அவர் பெயரில் இருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு 12,966,022 பவுண்டுகள். ஆனால் அவருக்கான இறுதிச்சடங்கள் உள்ளிட்ட செலவீனங்கள் போக இறுதியில் மிஞ்சிய தொகை 8,502,330 பவுண்டுகள். இருப்பினும் பிரித்தானிய அரண்மனை ஆலோசகர்களின் பல ஆண்டு புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குப் பிறகு இந்த தொகையானது 20 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக அதிகரித்தது.
இந்த தொகையானது டயானாவின் இரு மகன்களுக்கும் சரிபாதியாக பகிர்ந்து அளிக்கப்பட்டதுடன், அதில் ஒருபாதியை இளவரசர் ஹரி 25 வயதை எட்டிய பின்னர் பயன்படுத்தவும், எஞ்சிய தொகையை 30 வயது மேல் பயன்படுத்தவும் தமது உயிலில் டயானா எழுத்து மூலம் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பணத்திலேயே ஹரி மற்றும் மேகன் தம்பதி கனடாவில் வாழ்ந்ததும், தற்போது அமெரிக்காவில் வாழ்வதும் என கூறப்படுகிறது.