இந்திய அணிக்கு ஷாக்..!! அதிர்ச்சியளித்த BCCI..!! உலககோப்பையில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா!!
நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் முக்கிய நட்சத்திர ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.
இந்திய அணி
நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபோட்டியில் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா என அணிகளை தொடர்ச்சியாக வெற்றி கொண்டுள்ளது இந்தியா.
இன்னும் இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ள இருக்கின்றது. பேட்டிங், பௌலிங் என அனைத்து பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணிக்கு தற்போது அதிர்ச்சியளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
விலகிய ஹர்டிக் பாண்டியா
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை தடுக்க முயன்ற இந்திய ஹர்திக் பாண்டியா இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு அவருடைய கணுக்கால் தசைநார் கிழிந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா, நாட் அவுட் சுற்றுக்கு போட்டிகளில் அணிக்கு திரும்பிவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் தான் அதிர்ச்சியளிக்கும் விதமாக, தற்போது ஹர்டிக் பாண்டியா உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கின்றார்.
இந்த முடிவை அவர் BCCI'யிடம் தெரிவித்து அதனை பொதுவெளியில் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக அணியில் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இணைக்கப்பட்டுள்ளார்.