உண்மையை மறைத்த ஹர்திக்; இதை கவனிச்சீங்களா - கேப்டன் பதவிக்காக இப்படியா?
ஹர்திக் பாண்டியா தனக்கு காயம் ஏற்பட்டதை மறைத்து விளையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா
2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணி கேப்டனான் ஹர்திக் பாண்டியா, கடந்த 3 போட்டிகளில் ஒரு ஓவரை மட்டுமே வீசியுள்ளார்.
இதன் மூலம், தனக்கு ஏற்பட்டுள்ள காயத்தை அவர் மறைத்து கேப்டனாக தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல்,
“லீக்கில் விளையாடிய முதல் போட்டியில் முதல் ஓவரையே வீசி நீங்கள் உடற்தகுதியுடன் இருப்பதை காட்டினீர்கள். திடீரென பந்துவீச தேவையில்லை என முடிவு செய்கிறீர்கள். அப்படி என்றால் அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று நான் சொல்கிறேன். அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை.
டி-20 உலகக் கோப்பை?
ஆனால் அவரிடம் ஏதோ தவறு இருப்பது உறுதி. அது என் உள்ளுணர்வு” என விமர்சித்துள்ளார். இதன்படி, பாண்டியாவிற்கு மீண்டும் காயம் உறுதியானால், அவர் டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது கேள்விக்குறியாக மாறும்.
இதற்கிடையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் முடிவில் ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சரியான நேரத்தில் பந்து வீசுவேன். தேவைப்படவில்லை என்பதால் மட்டுமே பந்துவீசவில்லை. காயம் ஏற்பட்டு இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.