இப்படிப்பட்ட மனைவி யாருக்கும் கிடைக்கவே கூடாது..சாபம் விடும் ஹர்திக் ரசிகர்கள்!
ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷாவின் பதிவில் ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர்.
இப்படிப்பட்ட மனைவியா
பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அகஸ்தியா பாண்டியா என்ற மகன் உள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு, தனது பெயருடன் பாண்டியாவின் பெயரையும் சேர்த்து கொண்டார். இந்த நிலையில், அந்த பெயரை நீக்கிய நடாஷா, ஹர்திக் உடனான சில புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் விவகாரத்து என்ற வதந்திகள் இணையத்தில் உலாவி வருகின்றது.
இந்த சூழலில், ஐபிஎல் போட்டியின் போது இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. எனினும் இந்த விவாதத்திற்கு இருவரும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
ஹர்திக் ரசிகர்கள்
இதை தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியில் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்கு வகித்தார். ஆனால், இதற்கு ஒரு பதிவு கூட சமூக வலைதளங்களில் போடாததால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இச்சுழ்நிலையில் தான் நடாஷா தனது இன்ஸ்டாகிராமில் இந்தியா வெற்றி அடைந்த பிறகு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது புகைப்படத்தை 'பிட் செக்' என தலைப்பிட்டு பதிவிட்டுருந்தார். இந்த பதிவுக்கு லைக்ஸ் உடன் ஹர்திக் குறித்த கேள்விகளும் குவிந்தது.
இப்பதிவின் கமெண்ட் பாக்ஸில், நீங்கள் ஹர்திக்குடன் இருக்கிறீர்களா இல்லையா என்று சொல்லுங்கள் என்று விரக்தியுடன் கேள்வி கேட்டுள்ளனர். 'ஹர்திக் உலகக் கோப்பையை வென்றார், அவருக்கு பாராட்டு இடுகை எங்கே' என்று ஒருவர் நடாஷாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
'நடாஷா, நாங்கள் இனி காத்திருக்க முடியாது. ஹர்திக்குடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதை நேரடியாகச் சொல்லுங்கள்' என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். 'உலகக் கோப்பை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இப்படிப்பட்ட மனைவி யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
.