6 மாசம்..ரொம்ப மோசமா போச்சு!! ஆனாலும் நான் இதனால் தான் பேசவில்லை - ஹர்திக் பாண்டியா உருக்கம்
இந்திய அணியின் ஹீரோவாக மாறியுள்ள ஹர்திக் பாண்டியா.
ஹர்திக் பாண்டியா
கடந்த சில மாதங்களாக இந்திய அணி வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒருவர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான். அதற்கு பின்னனால் ஐபிஎல் அரசியல் உள்ளது. அவற்றையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, இந்திய அணி என்று வந்தவுடன் ரோகித் - ஹர்திக் இருவருமே சிறப்பாகவே செயல்பட்டார்கள்.
தன் மீது கடந்த சில மாதங்களாக வைக்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும், கேலிகளுக்கும் நேற்று கடைசி ஓவரில் 2 விக்கெட் என மொத்தமாக 3 விக்கெட் வீழ்த்தி ஹர்திக், ஹீரோவாக மாறியுள்ளார்.
6 மாதங்கள்
அவர் விமர்சித்தவர்களுக்கும் தற்போது வையடித்து போனார்கள். இந்த விஷயங்களையெல்லாம் பற்றி, கோப்பையை வென்றவுடன் பதிலடி கொடுத்துள்ளார் ஹர்திக். அவர் பேசும் போது, மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.
கடினமாக உழைத்தோம். மொத்த தேசமும் விரும்பியதை இன்று சாதித்துள்ளோம். இது எனக்கு இன்னும் அதிக ஸ்பெஷலான ஒன்று. . கடந்த 6 மாதங்கள் எனக்கு மிகவும் மோசமாக இருந்தது.
ஆனாலும் ஒரு வார்த்தை நான் கூட பேசலை. கடினமா உழைத்த்தால், சாதிக்க முடிவு என தெரியும். இது போன்ற வாய்ப்புகள் தான் ஒருவரை ஸ்பெஷலாக்குகிறது. மற்ற பவுலர்களுக்கு பாராட்டுக்கள்.