டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா - இவருக்காக கழட்டிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்!
இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப்பை ஏற்றுள்ளார்.
டி20 போட்டி
மும்பையில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டி ஜனவரி 3 ஆம் தேதி நடக்க உள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள் யார் யாரென பிசிசிஐ அறிவித்த நிலையில்
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த டி20 போட்டிகளை வழிநடத்த இருக்கிறார். மேலும் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக செயல்படுவார். இப்போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் போன்ற முன்னனி வீரர்கள் இடம்பெற போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன்
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை டி20 கேப்டனாக நியமித்தது நிரந்தர மாற்றமா இல்லை தற்காலிக மாற்றமா என்பது குறித்து பிசிசிஐ எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை. இதை தொடர்ந்து ஜனவரி 10 ஆம் தேதி ஒருநாள் போட்டிகளும் நடக்க உள்ளன.
#TeamIndia squad for three-match T20I series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/iXNqsMkL0Q
— BCCI (@BCCI) December 27, 2022
இந்த ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படுவர். ஒருநாள் போட்டியில் ஷிகர்
தவானும், இவ்விரண்டு போட்டிகளிலும் ரிஷப் பேண்டும் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.