பிரபல யூடியூபர் மீது பாலியல் புகார்.. நாடு கடந்து சில்மிஷம் செய்த நபர்!
யூடியூபர் ஒருவர் மீது வெளிநாட்டு பெண் பாலியல் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபர்
கேரளா மாநிலம், கண்ணூரில் பகுதியை சேர்ந்தவர் ஷாகீர் சுபான் (27). இவர் 'மல்லு டிராவலர்' என்று பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பேப்பர் போடும் பையனாக பணியைத் தொடங்கிய இவர் சவுதி அரேபியாவில் ஒரு சூப்பர் மார்க்கெட் டெலிவரி பாயாக ஒரு வருடமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் வியாபாரியாக இரண்டு வருடங்களும் பணிபுரிந்துள்ளார்.
இவர் தனது பல நாடுகள் கடந்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார். இவர் கண்ணூரில் இருந்து பூடான், மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, மலேசியா வழியாக சிங்கப்பூர் செல்லும் சாலையை 65 நாட்கள் , நடைபயிற்சி மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தியே கடந்துள்ளார்.
பாலியல் புகார்
இந்நிலையில், கொரோனா ஆரம்ப கட்டங்களில் அவர் வீடியோக்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்த நிலையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுபான் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அது எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சவுதிப் பெண் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டபோது நடந்ததாக கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் துணை இல்லாதபோது இவர் தவறாக நடந்துகொண்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த யூடியூபர் அந்த குற்றச்சாட்டு போலியானது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். இவர் மீது பாலியல் புகார் வந்ததால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.