அரை சதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர்
இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் விளாசியுள்ளார். இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தர் தனது முன்றாவது அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியி கை ஓங்கியிருந்த நிலையில் ரிஷப் பண்டுடன் கூட்டணி அமைத்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியினை முன்னிலை பெற செய்தனர்.
Washington Sundar joins the party!
— ICC (@ICC) March 5, 2021
He brings up his third Test half-century ?#INDvENG | https://t.co/6OuUwUzBpp pic.twitter.com/ks0aQDf02R
தற்போது இங்கிலாந்து சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சு கூட்டணியை கலங்க வைத்துள்ளார் சுந்தர். இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது.
ரிஷப் பண்ட் 101, ரோகித் சர்மா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க . வாஷிங்டன் சுந்தர் 60, அக்ஸர் பட்டேல் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.