50 முறை கத்திக்குத்து - கொடூரமாக கொல்லப்பட்ட ஜிம் உரிமையாளர்

Delhi
By Karthikraja Jul 26, 2024 02:44 AM GMT
Report

ஜிம் உரிமையாளரரை 50 முறை குத்தி கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெல்லி

வடகிழக்கு டெல்லியின் பஜன்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் என்ற சுமித் சவுத்ரி(28). ஜிம் உரிமையாளரான இவர், நேற்று ஒரு நபருடன் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார். 

delhi gym owner

அப்போது அங்கே அமர்ந்திருந்தவரை சுமித் சவுத்ரி உதைத்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தொப்பி அணிந்த நபர், சுமித் சவுத்ரியை வயிற்றில் 50 முறை கத்தியால் குத்துகிறார்.

மகள்களை கொன்று ரத்தத்தை சிவலிங்கத்தில் பூசிய தந்தை - நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

மகள்களை கொன்று ரத்தத்தை சிவலிங்கத்தில் பூசிய தந்தை - நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

காவல் துறை

இதில் சுமித் சவுத்ரி வாய்க்காலில் விழுகிறார். அப்போது நாய் ஒன்று, கத்தியால் குத்தியவரை நோக்கி குரைத்ததுடன் கடிக்க முயற்சிக்கிறது. இதன் பின் கத்தியால் குத்தியவர் தப்பி ஓடி விட்டார். அவருடன் பேசிக்கொண்டிருந்த நபர், அப்படியே நின்று உள்ளார். உடனடியாக சுமித் சவுத்ரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

arrest

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில்," சுமித் சவுத்ரி கொலை முயற்சி வழக்கில் தண்டிக்கப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.