சிவனுக்கு உயிருள்ள நண்டை காணிக்கையாக வழங்கும் வினோதம் - பின்னணி!
Gujarat
By Sumathi
சிவனுக்கு நண்டை காணிக்கையாக வழங்கும் வினோத பழக்கம் ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிவன்
குஜராத் மாநிலம், சூரத்தில் அமைந்துள்ள ராம்நாத் ஷிவ் கெலா என்ற சிவன் கோயிலில், காது தொடர்பான பிரச்னை உடையோர், உயிருடன் இருக்கும் நண்டை காணிக்கையாகச் செலுத்தி வேண்டுகின்றனர்.

இதனால் காது தொடர்பான பிரச்னைகள் குணமடைந்து விடும் என உறுதியாக நம்புகின்றனர். இதனால் சூரத் மட்டுமல்லாது பிற பகுதிகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வருகின்றனர்.
நண்டு காணிக்கை
ஆண்டிற்கு ஒரு முறை இவ்வாறு காணிக்கை செலுத்தும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக இக்கோயில் பக்தர்கள் கூறுகின்றனர்.
உயிருள்ள நண்டுகளை காணிக்கையாகச் செலுத்துவது பார்ப்பதற்கே விசித்திரமாக உள்ளது.