மணமகளை மிரட்டி திருமணத்தை நிறுத்திய திருநங்கை - மணமகனுக்கு நேர்ந்த விபரீதம்!

Death Salem
By Vinothini May 23, 2023 05:30 AM GMT
Report

சேலத்தில் ஒரு இளைஞருக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் திருநங்கை ஒருவர் அனுப்பிய புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம்

சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி ஊராட்சி ஸ்ரீ வாணி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ். இவருக்கு 27 வயது ஆகிய நிலையில், இவர் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார்.

groom-suicide-for-illigal-affair-with-transgender

இவருக்கும் சேலம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 20ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகின்ற மே25ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

அப்பொழுது திடீரென மனமகன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணை

இதனை தொடர்ந்து, விசாரணையில், சங்ககிரி குப்தா காலனியில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு வீட்டிற்க்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்ற போது வீட்டின் உரிமையாளரான அஸ்மா என்ற திருநங்கைக்கும் விக்னேஷுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

groom-suicide-for-illigal-affair-with-transgender

மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படத்தை மணப்பெண்ணிற்குக்கு திருநங்கை அஸ்மா அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து அவர், விக்னேஷ் தனது கணவர் என்றும், நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என மணப்பெண்ணிடம் மிரட்டியுள்ளார்.

பின்னர் மணமகளின் வீட்டார் இவரது வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர்.

இதன் பிறகு அவர் மனமுடைந்து தனது தாயின் சேலையை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.