கல்யாணத்திற்கு வராமல் ஹனுமூன் சென்ற மணமக்கள் - மிரண்ட குடும்பம்!
திருமணத்திற்கு வராமல் ஹனிமூன் சென்ற மணமக்கள் குறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹனிமூன்
மணமக்கள் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கொள்ளவில்லை. அவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் உறவினர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து மணமகனின் தங்கை, “எனது அண்ணனின் திருமண வரவேற்புக்காக உறவினர்கள் காத்திருந்தனர். வழக்கமாக திருமண வரவேற்புக்கு முன்பாக திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மது அருந்தி மகிழ்ச்சி அடைவர்.
பிறகு புகைப்படங்கள் எடுக்கப்படும். ஆனால் அன்று நீண்ட நேரம் காத்திருந்தும் மணமக்கள் வரவில்லை. அங்கு அவர்கள் வரமாட்டார்கள் என்று எங்கள் யாருக்கும் தெரியாது. உறவினர்களிடம் மணமக்களை அறிமுகப்படுத்தவிருந்த எனது அண்ணனின் நண்பர் அவர்கள் திருமண வரவேற்புக்கு வரமாட்டார்கள்.
குடும்பத்தினர் அதிர்ச்சி
ணமக்கள் ஹனிமூனுக்கு சென்றுவிட்டதாக கூறினார். எனது தாயும் தந்தையும் இதை குறித்து மிகுந்த வேதனையடைந்தார்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள், அனைவரும் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் அவர்களை பலமுறை தொடர்புக்கொண்டும் அவர்கள் எங்கள் அழைப்பு ஏற்கவில்லை.
அவர்கள் அப்போது தேனிலவுக்கு செல்ல பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு சென்றுவிட்டதாக அவர்களது நண்பர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மணமகனின் தம்பியின் காதலி கர்ப்பமாக இருப்பதாகவும் அதை தனது அண்ணனின் திருமணத்தில் அவர் அறிவிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் மணமக்கள் திருமண வரவேற்பை புறக்கணித்ததாக கூறுகின்றனர்.