'மிஸ் இலங்கை' பெண்ணிடமிருந்து சில மணி நேரத்தில் பட்டம் பறிப்பு - நடந்தது என்ன?

srilanka girl world miss
By Jon Apr 08, 2021 04:53 PM GMT
Report

மிஸ் இலங்கை பட்டம் வென்றவரிடம் இருந்து உடனே பட்டம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான மிஸ் இலங்கை பட்டம் புஷ்பிகா சில்வா என்பவர் பெற்றார். கிரீடத்தை சூடிய மகிழ்ச்சியில் இருந்த புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவரிடம், நீங்கள் இந்த பட்டத்தை பெற தகுதி இல்லை என கூறி பட்டம் வென்ற கரோலின் கிரீடத்தை பறித்தார்கள்.

இதனையடுத்து மிஸ் இலங்கை பட்டம் அடுத்த இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததை அடுத்து புஷ்பிகாவுக்கே பட்டம் திரும்ப வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Gallery